கல்வி வளர்ச்சி நாள் பேச்சு போட்டி

kalvi valarchi naal speech in tamil

அனைவருக்கும் எனது மனமார்ந்த முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். கல்வி வளர்ச்சியில் அரும் பாடுபட்ட காமராசரின் பிறந்த நாளன்றே கல்வி வளர்ச்சி நாளாக திகழ்கின்றது என்ற வகையில் இன்று நான் கல்வி வளர்ச்சி நாள் பற்றியே பேசப்போகின்றேன்.

காமராசரும் கல்வியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும்

படிக்காத மேதை, கல்வியின் தந்தை, கல்விக் கண் திறந்தவர் என அழைக்கப்பட்ட காமராசர் அவர்கள் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்.

இவர் பிறந்த ஜுலை 15ம் நாளினையே இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகின்றனர். ஏனெனில் இவர் அனைவரும் ஆச்சரியத்துக்குள்ளாகும் வகையில் பல கல்வி நலத்திட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளார்.

காமராசரின் பிறந்த நாளான அன்றே கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவாற்கான காரணம் தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த காமராசர் அவர்கள் 1953 ம் ஆண்டு தொடக்கக் கல்வி திட்டத்தினை அறிமுகப்படுத்தி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

அரசினால் மூடப்பட்டு காணப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்து மாணவர்களின் கற்றலினை துரிதப்படுத்தினார். ஏழை கிராமப்புரத்தில் வாழ்கின்ற மாணவர்கள் கல்வியினை தொடர்வதற்காக சிறந்த வசதிகளை மேற்கொண்டார்.

அதாவது பதினோராம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தி எழுத்தறிவின்மையை ஒழித்தார். இதன் காரணமாக 7 சதவிகிதமாக இருந்த கல்வி விகிதமானது 37 சதவிகிதத்தை எட்டியது.

ஏழை பள்ளிக்குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது உணவு வழங்கும் திட்டமான மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இவர் பள்ளிகளின் எண்ணிக்கையை மேம்படுத்துவது மாத்திரமன்றி கல்வித்தரத்தை உயர்த்தவும் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். பாடசாலைகளில் தேவையற்ற விடுமுறைகளை குறைத்தார்.

காமராசர் அவர்கள் பள்ளிகள் கட்டுவது, உணவு வழங்குவது, ஆசிரியரை நியமிப்பது என பல முயற்சிகளை மேற்கொண்டு சிறந்த கல்வித் திட்டத்தை ஏற்படுத்த மாபெரும் புரட்சியினை ஏற்படுத்தினார்.

ஒவ்வொரு தனிமனிதனும் கல்வியை தன் பொறுப்பு என நினைத்து செயற்பட வேண்டும் என்ற நோக்கில் கல்வி வளர்ச்சிக்கான திட்டத்தினை மேற்கொண்டார்.

இதற்காக பொது மக்களிடம் இருந்து நன்கொடை வசூலித்தனர். நன்கொடையினூடாக சுமார் 4 கோடி ரூபா பொது மக்கள் வழங்கினர். இதன் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

இதனால் ஏழை மற்றும் பணக்காரன் என்ற பாகுபாடுகள் நீங்கி அனைவரும் சமமானவர்கள் என்ற நிலை மேலோங்கி காணப்பட்டது.

கல்வியறிவின்மையை தவிர்ப்பதற்காக கட்டாய ஆரம்ப கல்வியை உருவாக்கினார். தனது மாநிலத்தில் தொடக்க பள்ளிகள் இல்லாத இடமே இல்லை என கூறுமளவிற்கு பள்ளிகளை நிறுவி கல்வி நடலடிக்கைகளை மேற்கொண்டார்.

முதன் முதலாக ஆசிரியர்களுக்கு குடும்ப ஓய்வூதிய திட்டம் ஒன்றை காமராசர் அவர்களே வழங்கினார்.

மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, விவசாய கல்லூரி என கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கள் திட்டத்தை ஏற்பாடு செய்தார்.

இவ்வாறாக கல்விக்காகவே அரும்பாடுபட்டு கல்வி நடவடிக்கையில் பாரியதொரு மாற்றத்தினை ஏற்படுத்தியவரான காமராசரின் பிறந்த நாள் தினத்தையே அரசானது கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகின்றது.

கல்வி வளர்ச்சி நாளும் அன்றைய தின நிகழ்வுகளும்

தமிழகத்தில் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பல நிகழ்வுகள் இடம் பெறுகின்றது. அன்றைய நாளில் மாணவர்கள் பள்ளி வளாகத்தை காமராசரின் திருவுருவப் படத்தால் அலங்கரித்து கல்வி மேம்பாட்டிற்காக ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கலை, ஓவியம், கட்டுரை, கவிதை போன்ற போட்டிகள் இடம் பெற்று கல்வி உணர்வை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கி மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.

காமராசர் அவர்கள் தான் படிக்காமல் இருந்தாலும் தன் நாட்டு மக்கள் கற்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தை கொண்டவராகவே திகழ்ந்தார்கள் அவர் பெற்றுத்தந்த கல்வியை நாம் சிறப்பாக கற்று வாழ்க்கையில் வெற்றியீட்ட வேண்டும்.

You May Also Like:

கல்வி கண் திறந்தவர் பேச்சு போட்டி

புதிய கல்வி கொள்கை நன்மைகள் கட்டுரை