உணவு வலை என்றால் என்ன

unavu valai in tamil

ஒரு விலங்கானது ஒரு குறிப்பிட்ட வகை உணவினை மாத்திரம் உண்பதில்லை. இது பல பிணைப்புக்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. இதுவே உணவு வலையாகும்.

உணவு வலை என்றால் என்ன

உணவு வலை என்பது ஆற்றல் மாற்றத்திற்காக நிகழும் எண்ணற்ற உணவுச் சங்கிலித் தொடர்களின் வலை போன்ற அமைப்பே உணவு வலை எனப்படும். இங்கு விலங்குகள் வெவ்வேறு உணவு வகைகளில் தங்கி வாழக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படும்.

உணவுச் சங்கிலியின் ஒரு இணைப்பு அற்றுப் போனாலும் அதில் தங்கி வாழும் அங்கி அழியாது பாதுகாக்கப்படுகின்றது. மேலும் உணவு வலையினூடாக உணவிற்கான போட்டி குறைக்கப்படுகின்றது. ஓர் அங்கியின் நிலவுகைக்கு உணவு வலை அவசியமான தொன்றாகும்.

விலங்குகள், தாவரங்கள், பூஞ்சைகள் உட்கொள்ளும் சர்வ உயிரினங்களின் வெவ்வேறு விகிதாசாரங்கள் இருப்பதால் உணவு வலை மிகவும் சிக்கலானவையாக காணப்படுகின்றது.

உணவு வலையின் முக்கியத்துவம்

உணவுத் தேவைகள் சிறந்த முறையில் தீர்க்கப்படுகின்றது. அதாவது ஓர் உணவிற்கான கேள்வியானது குறைவாக காணப்படுவதோடு ஓர் உணவினை அனைவரும் பெற்றுக் கொள்ளல் என்ற நிலை மாறி உணவிற்கான போட்டி இல்லாது காணப்படுகின்றது.

ஓர் அங்கியின் நிலவுகைக்கு உணவு வலையானது அவசியமானதொன்றாக காணப்படுகின்றது. அதாவது உணவு வலையினூடாக ஓர் அங்கியை மற்றுமொறு விலங்கு சாப்பிடுகின்றது என்றால் பிரிதொரு அங்கியினை ஏனையவை சாப்பிடாது மற்றுமொரு வகையான தாவரங்கள் அல்லது விலங்குகள், பூச்சிகளை சாப்பிடுவதனை சுட்டிக் காட்ட முடிகின்றது.

ஓர் விலங்கானது ஒரே உணவுச் சங்கிலியில் இருந்து பல்வேறு வகையான உயிரினங்களுக்கு உணவளிப்பதற்கு உணவு வலையானது அவசியமாகின்றது. மேலும் உணவு வலைகளானவை சுற்றுச் சூழல் மற்றும் உற்பத்தி திறன் போன்றவற்றில் மாற்றத்தினை ஏற்படுத்துவதில் தாக்கம் செலுத்துகின்றது.

ஆரோக்கியமான சுற்றுச் சூழல் மற்றும் ஒரு சமச்சீரான சூழலை ஏற்படுத்த உணவு வலையானது முக்கியத்துவம் பெறுகின்றது. இதனூடாக சிறந்த முறையின் உற்பத்தியினை மேற்கொண்டு சூழல் சமநிலையை பேண துணைபுரிகின்றது.

உணவு வலை நிலைகள்

முதல் நிலை நுகர்வோர்

முதன்மை நிலையில் காணப்படுபவற்றினால் சொந்தமாக உணவினை உற்பத்தி செய்ய முடியாது. இவர்களை ஹீட்டோரோட்ரோபிக் என அழைக்க முடியும். இவற்றிற்கு முதன்மை உற்பத்தியாளர்களிடம் இருந்தே உணவினை வழங்க முடியும். அதாவது தாவரங்கள் மற்றும் அதனை உண்ணும் விலங்குகளானவை முதன் நிலை நுகர்வோராகும்.

நுகர்வோர் தங்கள் உணவு வகைகளால் சூழப்பட்டு காணப்படுகின்றமையினை தாவர வகைகளாக கொள்ளலாம். அதாவது சில உயிரினங்களானவை சதைப்பற்றுள்ள பழங்களை உட்கொள்ளும் திறன்களை கொண்டுள்ளது. தாவரங்களின் இழைய திசுக்களை ஜீரணிக்க மூலிகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் தாவரம், விலங்கு, பூஞ்சை தோற்றம் கொண்ட உணவை உட்கொள்ளக் கூடிய உயிரினங்களில் மனிதனும் காணப்படுகின்றான்.

இரண்டாம் நிலை நுகர்வோர்

தாவர வகைகளை உண்ணும் விலங்குகள் இதனுள் அடங்கும். இது உற்பத்தியாளர்களை உட்கொள்ள முடியாததால் முதன்மை நுகர்வோரை நேரடியாக உட்கொள்ளக் கூடியதாக காணப்படும். அதாவது பல்வேறு வகையான இரண்டாம் நிலை நுகர்வோர் காணப்படினும் பூச்சி கொல்லி தாவரங்கள் போன்றவையும் இதனுள் உள்ளடங்கும்.

மூன்றாம் நிலை

இவை முதன்மை மற்றும் இரண்டாம் நிலை நுகர்வோரிற்கு உணவளிக்க கூடியதாக காணப்படுகின்றன. அதாவது முதன்மை நிலை தயாரிப்பாளர்களை நேரடியாக உணவில் சேர்த்து கொள்ள முடியும்.

மேலும் ஒட்டுண்ணிகளானவை இறந்த பிற விலங்குகளின் சடலங்களிற்கு உணவளிக்க கூடியவையாக இவை காணப்படுகின்றன.

இவ்வாறாக சுழற்சி முறையின் மூலம் மீண்டும் முதன்மை உற்பத்தியாளர்களில் ஆற்றலும் பொருளும் மீண்டும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

You May Also Like:

நேர்முக வர்ணனை என்றால் என்ன

கலைத்திட்ட முகாமைத்துவம் என்றால் என்ன