என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை

தமிழைத் தன் உயிராக்கி, உணர்வைத் தன் மதியாக்கி புரட்சிக்கவி பாடியவர் புதுவைக்குயில் பாரதிதாசனாவார். 20ம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க்கவிஞராவார்.

எண்ணற்ற தமிழ்க் கவிஞர்களுள் என்னைக் ஈர்த்த ஆளுமை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார். தமிழ் தழைக்கவும், தமிழ் பெருமை நிலைக்கவும், தமிழ்நாடு செழிக்கவும், பாடல்கள் பாடிய நூற்றாண்டுக் கவிஞர்களுள் இணையற்றவர் பாரதிதாசனே.

என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தமிழ்ப்பற்று
  • கவிச்சுவை
  • சமுதாயப் பார்வை
  • படைப்புக்கள்
  • முடிவுரை

முன்னுரை

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என முழங்கும் காலம் இக்காலம் இந்த முழக்கத்திற்கு மூலமாக இருந்த பெருமக்களுள் பாவேந்தனார் பாரதிதாசனார் குறிப்பிடத்தக்கவராவார். என்னை ஈர்த்த தமிழ் ஆளுமை புரட்சி கவியான இவரே ஆவார்.

பிறப்பும், இளமையும்

சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசன் 29.04.1891 இல் கனனசபை முதலியாருக்கும், இலக்குமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இளமையில் பிரெஞ்சு மொழியையும், தமிழையும் கற்றார்.

16ம் வயதில் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து பயின்று தமிழ்ப்புலமைத் தேர்வில் மாநிலத்திலேயே முதல்வராய்த் தேறினார். 18ம் வயதில் அரசினர்ப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியமர்ந்தார். மகாகவி பாரதியார் மீது கொண்ட அன்பால் தம் பெயரைப் பாரதிசாதன் என வைத்துக் கொண்டார்.

தமிழ்ப்பற்று

“தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
“உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே”
“தமிழ் என்னுயிர் என்பேன்”

போன்ற கவிதை வரிகள் பாரதிதாசனின் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்துவனவாகும்.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”, “தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்” என முழங்கினார்.

கவிச்சுவை

இயற்கையில் ஈடுபாடுமிக்கப் பாவேந்தரின் கவிதைகள் கருத்தாளமும், கற்பசைன் சுவையும் கொண்டு கற்பாரைக் கழிப்பாறச் செய்பவையாகும்.

“நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலவென்று
காட்டுகின்றாய் ஒளிமுகத்தை” எத்தனை அழகான கற்பனை.
அருவிகள் வயிரத் தொங்கல் அடர்கொடி பச்சைப்பட்டே!
குருவிகள் தங்கக்கட்டி குளிர்மலர் மண்ணின் குப்பை!

என்னும் அடிகளில் சொற்கள் மாறி மாறி விழும் அழகைக் காண முடிகின்றது.

சமுதாயப் பார்வை

வெள்ளம் போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம் அன்னர் உள்ளதால் ஒருவரே! எனப் பாடித் தமிழரிடையே ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.

“சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே” எனச் சாதி வெறியைச் சாடுகின்றார்.

“வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள் மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ?” என வினவிக் கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தார்.

“மாதர் உரிமை மறுப்பது மாண்பா? மாதர் முன்னேற்றத்தில் மகிழ்வது மாண்பா? ஆராய்ந்துபார்” என்கின்றார்.

மேலும், “எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதற்கான இடம் நோக்கி நடக்கின்ற திந்த வையம்” என்கின்ற பொதுவுடமைக் கருத்துக்குச் சொந்தக்காரனாவார்.

“ஓடப்பராய் இருக்கும் ஏழை யப்பர் எதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவர் உணரப் பாநீ” எனும் பாடல் உலகப் பண்பாட்டுச் சமத்துவப் பார்வைக்கு வழிகாட்டுகின்றது.

படைப்புக்கள்

எண்ணற்ற படைப்புக்களை இவரால் வழங்கப்பட்டுள்ளது. அவரது சிறந்த படைப்புக்களுள் எதிர்பாராத முத்தம், குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழ் இயக்கம், பாண்டியன் பரிசு, பாரதிதாசன் ஆத்திசூடி, பெண்கள் விடுதலை போன்றவை ஒரு சிலவாகும்.

முடிவுரை

உடல்வளமும் உள்ளத்திடமும் உண்மை உரைக்கும் பண்பும் நேர்மையும் மொழிப்பற்றும் இனப்பற்றும் கொண்ட பாவேந்தரின் கனவுகளை நனவாக்குவதே நமது கடமையாகும்.

You May Also Like:

சிந்துக்குத் தந்தை என அழைக்கப்பட்டவர்

கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்