எச்சரிக்கை: கனடா அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் கைது

இலங்கையில் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் படல்கம எனும் பிரதேசத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடத்தி வந்ததாக கூறி இருந்தாலும் சந்தேகநபர் பன்னல பிரதேசத்தில் போலியான மோசடியில் ஈடுபடும் நோக்கத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடமும் ஆண் ஒருவரிடமும்இரண்டு லட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொள்வதற்காக படல்கம எனும் நகருக்கு வந்த போதே அவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவரது வீட்டில் இருந்து ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மை காலங்களில் வெளிநாட்டு மோகங்களில் சுற்றி திரிபவர்களை இலக்கு வைத்து பல மோசடி சம்பவங்கள் இடம் பெறுகின்றன. இது போன்று பலரும் பெரும் தொகை பணத்தை இழந்து இருக்கின்றனர்.