ஜெயம் ரவி -ஆர்த்தி விவாகரத்திற்கு தனுஷ் தானா காரணம்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் தான் தனுஷ் மற்றும் ஜெயம்ரவி. இருவரும் பல வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர்.

இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் குபேரா படத்தில் நடித்து வருகின்றார். இப் படத்தை சேகர் கம்முல்லா இயக்கியுள்ளார்.

தனுஷ் தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கியிருக்கிறார்.இவர் இயக்குநராக அறிமுகமான பவர் பாண்டி படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது, இவருக்கு கிடைத்த மிக்கபெரும் வெற்றியாகும்.

தனுஷ்,ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.இந் நிலையில் இருவரும் விவாகரத்து செய்வதற்கு முடிவு எடுத்துள்ளனர்.

தயாரிப்பாளர் ராயன் கூட இவர்களை திட்டியுள்ளார். தனுஷ் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா பொம்பளையா? என பலர் பேசும் அளவுக்கு வாழலாமா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் விவாகரத்து முடிவை விடுத்து ஒன்றாக இணைந்து வாழுங்கள்.

ரஜனி சார் என்னவொறு மனிதர்,அவருடைய மனதை கஷ்ட படுத்தலாமா? எனவும் கூறியுள்ளார். ரஜனி சார் போன்ற மாமனிதனுக்காக நீங்கள் சேர்ந்து வாழவேண்டும் என்றும் கூறியுள்ளார். இவர்கள் தமிழ் பண்பாட்டிற்கே துரோகம் செய்கின்றனர் என்றும் கூறினார்.

சினிமா பிரபலங்கள் பலரும் விவாகரத்து பெற்றுவரும் நிலையில் அதற்கு எல்லாம் தனுஷ் தான் காரணம் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.

தற்போது ஜெயம் ரவி ஆர்த்தி இருவரும் விவாகரத்து செய்யவுள்ளனர். இருப்பினும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.இதற்கும் தனுஷ் தான் காரணம் என்று அனைவரும் கூறிவருகின்றனர்.

இது பற்றி  சபிதா ஜோசப்  பேசியுள்ளார். அதில் அவர் இவர்கள் இருவரும் பிரிவதற்கு அவர்களுக்குள் இருக்கும் ஈகோ தான் காரணம் என்று கூறியுள்ளார். தனுஷிற்கும் இதற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

more news