பிரபல இயக்குனர் திடீர் மரணம்!- ஆடிபோன தமிழ் சினிமா

இயக்குனர் பசி துரை உடல் நல குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

இவருடைய முழு பெயர் செல்லதுரை. இவருக்கு 2 மகன், மகள் உட்பட 3 பிள்ளைகள்.

84 வயதுகள் கடந்த இவர் திரை உலகின் மூத்த கதாசிரியர் அவர். இவர் இயக்கிய பசி திரைபடம் தேசிய விருதை பெற்றது.

1979 ம் ஆண்டிற்கான சிறந்த திரைபடம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றது. இந்த பெருமை முழுவதும் இவரையே சாரும்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 46 படங்களை இயக்கியுள்ளார்.

பசி படத்திற்கு தேசிய விருதை மட்டுமல்லாது மாநில அரசு விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பல்வேறு விருதுகளையும் பெற்று கொடுத்துள்ளார்.

இந்த படத்திற்கான சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

இவர் இயக்கிய அவளும் பெண்தானே ,ஆசை 60 நாள், ஒரு வீடு ஒரு உலகம், பாவத்தின் சம்பளம் போன்ற திரை படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இவரின் மரணத்திற்கு அனைத்து பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More News