ஜெயம்ரவிக்கு அடித்தது அதிஷ்டம்!- அடுத்த படத்திற்கு இத்தனை கோடியா?

குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமான ஜெயம்ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் இவரும் ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

எனினும் சமீப காலமாக இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே படு தோல்வியையே தழுவி வருகின்றது.

ஆனால் பொன்னியின் செல்வன் மாத்திரம் இவருக்கு வெற்றியை கொடுத்தது.

பொன்னியின் செல்வன் படத்தின் கதாநாயகன் பொன்னியின் செல்வனாக இவர் நடித்திருப்பார்.

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் திரிஷா ஆகியோரினநாடிப்பும் நன்றாகவே இருந்தது.

இதன் பின் இறைவன் மற்றும் சைரன் படத்தில் நடித்திருந்தார். இவையும் படு தோல்வியை தழுவின.

சமீபத்தில் இவரின் ரசிகரின் இறப்பிற்கு வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார். அது சம்பந்தபட்ட புடைபடம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இவ்வாறு இருக்க இவரின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஐசாரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இப் படத்தின் பட்ஜெட் 120 கோடி ஆகும்.

ஜெயம்ரவி இதுவரைக்கும் இவ்வளவு பட்ஜெடில் படம் பண்ணியதே இல்லை. இதுவே அதிக பட்ஜெடில் பண்ணும் படமாகும்.

More news