சிவகார்த்திகேயன் நடித்த படம் தனுஷிற்காக எழுதபட்டது!- உண்மையை கூறிய இயக்குனர்.

தமிழ் சினிமாவில் தனுஷ், சிவகார்த்திகேயன் இருவருமே முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள். சிவகார்த்திகேயன் இவ்வளவு தூரம் வளர்ந்ததுக்கு காரணம் நடிகர் தனுஷ் தான்.

சிவகார்த்திகேயன் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர். இவர் மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் தனுஷின் 3 படத்தில் தனுஷின் நண்பனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பார். இப் படத்தில் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக சந்தானம் நடிக்கவிருந்தார்.

பின் தன்னை சினிமாவிற்குள் கொண்டுவந்தது சிம்பு , அவர் தனுஷ் படத்தில் நடித்தால் என்னை தவறாக நினைத்து விடுவார் என்று அவர் இடையில் விலகி விட்டார். அதனால் தான் சிவகார்த்திகேயனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின் தான் கிரோவாக எதிர்நீச்சல் படத்தில் நடித்திருந்தார். இப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற அதன் பின் வரிசையாக படங்கள் நடித்து இன்று ஒரு பெரிய நிலையில் இருகக்கின்றார்.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு காரணமான எதிர்நீச்சல் படத்தின் கதை தனுஷிற்காக தான் எழுதி வைத்திருந்தேன் என்று துரை செந்தில்குமார்கூறியுள்ளார்.

தனுஷ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு இயக்குனர் தேவை என்று கூற நானும் என்னிடம் இருந்த அவருக்காக எழுதிய அந்த கதையை கூறினேன், அது அவருக்கு பிடித்து போக அதில் சிவாகர்த்திகேயனை நடிக்கவைத்து விட்டார் என்று கூறியுள்ளார்.

more news